"சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் செயலில் அறநிலையத்துறை ஈடுபடவில்லை" - அமைச்சர் சேகர் பாபு

0 3335

சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கில், இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டது கண்டறியப்பட்டால், அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சிதம்பரம் கோவிலை அரசு கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எந்த ஒரு செயலிலும் இந்து அறநிலையத்துறை ஈடுபடவில்லை. அறநிலையத்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட திருக்கோயில் என்பதால் அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் யார் பெயரில் பட்டா உள்ளது என்பது குறித்து விவரங்கள் சமர்ப்பிக்கும் தேதி நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. தீட்சிதர் தரப்பில் அளிக்கும் பதிலை பொறுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். சட்டத்திற்கு புறம்பாக தீட்சிதர் தரப்பு செயல்பட்டால் அரசு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும் என அவர் தெரிவித்து பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments